×

மனைவி தற்கொலை வழக்கில் அமமுக நிர்வாகி கைது கே.வி.குப்பம் அருகே

கே.வி.குப்பம், மே 4: கே.வி.குப்பம் அருகே மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அமமுக நிர்வாகியை போலீசார் நேற்று கைது செய்தனர். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த கொசவன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப்(40). இவர் அமமுகவின் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக உள்ளார். இவரது மனைவி லிஷா(33). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகளாகிறது. ஆனால், குழந்தைகள் இல்லை. இதுதொடர்பாக தம்பதிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல், கடந்த மாதம் 26ம் தேதியும் கணவன், மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், மனமுடைந்த லிஷா திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், லிஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து லிஷாவின் தந்தை கே.வி.குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து, மனைவி லிஷாவை தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாக பிரதீப்பை நேற்று இரவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post மனைவி தற்கொலை வழக்கில் அமமுக நிர்வாகி கைது கே.வி.குப்பம் அருகே appeared first on Dinakaran.

Tags : AAM MUK ,KV Kuppam ,AMU ,Pradeep ,Kosavanputur ,Vellore district ,KV Kuppam Assembly Constituency ,AAMUK ,KV ,Kuppam ,Dinakaran ,
× RELATED பண்ணை தீ விபத்தில் 6,200...